0
அமெரிக்காவின் வெற்றிக்கு இந்தியர்கள் சிறப்பான பங்களிப்பை அளித்திருப்பதாக அந்நாட்டு அதிபர் மாளிகை (வெள்ளை மாளிகை) பாராட்டு தெரிவித்துள்ளது.
வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமெரிக்காவுக்கு இந்தியர்கள் அளித்த பங்களிப்பை பாராட்டும் வகையில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அந்நாட்டு தபால்துறை சார்பில் புதிய தபால்தலை வெளியிடப்பட்டது.
அப்போது வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோஸ் எர்னஸ்ட் பேசியதாவது:
இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நெருங்கிய கலாசார உறவுகள் உள்ளன; அமெரிக்காவில் இந்தியர்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். அமெரிக்காவின் வெற்றி, பொருளாதார வளர்ச்சி மற்றும் ஜனநாயகத்துக்கு இந்தியர்கள் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர்.
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களால், நமது நாடு ஏராளமான நன்மைகளை பெற்றுள்ளது என்றார். 

Post a Comment

 
Top